இரத்த தானம் செய்ய அதிமுக சார்பில் புதிய செயலி ஒன்றை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார். இந்த செயலியின் பெயர் ‘ இரத்தத்தின் ரத்தமே ‘ ஆகும்.
இரத்தம் தேவைபடுவோர்களும், இரத்த தானம் செய்ய விரும்புவோர்களும் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம். இரத்த தானம் செய்ய விரும்புவோர், உலகில் எங்கிருந்தாலும் தங்கள் பெயர், இரத்த பிரிவு, தொலைபேசி எண் போன்ற விவரங்களை இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த சில வினாடிகளில், இரத்தம் தேவைபடுவோரின் முகவரிக்கு 10 கிலோமீட்டர் அருகாமையில் இருக்கும் ரத்த கொடையாளிகளுக்கு அந்த விபரம் சென்றடையும். இதையடுத்து கொடையாளிகள் தொலைபேசி எண் அவரது இருப்பிடம் முதலிய விபரங்கள் இரத்தம் தேவைபடுவோருக்கு சென்றடையும்.
இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய google play store – Rr-blood AIADMK என்று தேடி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.