AIADMK MP death
AIADMK MP death

AIADMK MP death – திண்டிவனம்: விழுப்புரம் அதிமுக எம்.பி ராஜேந்திரன், திண்டிவனத்தில் வந்து கொண்டிருக்கும்போது சாலைத்தடுப்பில் அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது.

கார் விபத்தில் எம்.பி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டிவனம் அடுத்துள்ள ஆதனபாட்டை சேர்ந்த ராஜேந்திரன், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இவர் நேற்று முதல்வருடன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, தனது ஓட்டுநர் அன்புச்செல்வன் என்பவருடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திண்டிவனம் சாலையில், தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலை தடுப்பு சுவர் மீது, கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இராஜேந்திரனின் கார் மோதியது.

இதனால் சம்பவ இடத்திலேயே எம்.பி ராஜேந்திரன் (!) உயிரிழந்தார். உயிரிழந்த ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்தை நேரில் பார்த்த சட்டத்துறை அமைச்சர் சண்முகம் உயிரிழந்த ராஜேந்திரன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.