திமுக எம்எல்ஏ ஒருவர் கொரானாவுக்கு பலியாகி இருந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ ஒருவர் இந்த கொடூர வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

AIADMK MLA Tested Positive in Corona Test : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெ அன்பழகன் என்பவர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பலியானார்.

இவரின் மறைவிலிருந்து இன்னும் அரசியல் வட்டாரம் மீளவில்லை. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ பழனி என்பவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து எம் எல் ஏ பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.