17 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
AIADMK Meeting in Chennai Vanagaram : தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து இதுவரை தமிழக அரசு செய்த நல திட்டங்கள் குறித்தும் சாதனைகள் குறித்தும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் இன்று சென்னை வானகரம் பகுதியில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியின் சிறப்பான திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபல் அதிமுகவை தொடர்ந்து மோசமாக விமர்சனம் செய்து வரும் திமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்கலாம் என்பது குறித்த முடிவுகளை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுக்கலாம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு அடுத்ததாக முதல்வர் பழனிச்சாமியை ஒருமனதாக முதல்வர் வேட்பாளராக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்.காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.சி.டி பிரபாகர், முன்னாள் எம்.பி பி.எச் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.