தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில், அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது. அதை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கனவே கூறிவிட்டார்.
மேலும், ‘சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பு கொடுக்க வேண்டும்’ என திரையரங்குகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்த விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகில் இசை வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் விஜய் பேசியதே இதற்கு பின்னணி என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிகில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனர் கல்பாத்தி அகோரம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அரசு அனுமதி அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.