அகரம் பவுண்டேஷன் நிறுவனம் தன்னுடைய கல்வி சேவையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிகராக மட்டுமில்லாமல் அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையின் மூலமாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக தொடர்ந்து உதவி வருகிறார்.
இந்த அறக்கட்டளை மூலமாக ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்த வரும் ( 2019 – 2020 ) அகரம் விதைக்கான தேர்வு நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 6,301 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன் பின்னர் அகரம் பவுண்டேஷன் நடத்திய தேர்வின் மூலமாக 502 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு துணை மருத்துவப்படிப்புகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவிலியர், டிப்ளமோ, இன்ஜினியரிங் என பல துறைகளை சேர்ந்த கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
தங்களின் கனவு நிறைவேறியதால் அந்த மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் கல்வி பயின்று வருகின்றனர்.