கிரிசாயா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், பெனிதா சந்து, பிரியா ஆனந்த், பிளாக் ஷீப் அன்பு மற்றும் பலர் நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா.
அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரிமேக்கான இப்படத்தின் விமர்சனத்தை இப்பொது பார்க்கலாம் வாங்க.
படத்தின் கதைக்களம் :
கோவக்கார கல்லூரி மாணவனான துருவ் சைலன்ட் பெனிதா சந்துவின் மீது காதல் கொள்கிறார். இருவரும் தீவிரமாக காதலிக்கின்றனர். ஆனால் இவர்களின் காதலுக்கு பெனிதா சந்துவின் வீட்டில் ஒப்பு கொள்ளாததால் பெனிதாவிற்கு வலுக்கட்டாயமாக வேறொரு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
இதனால் துருவ் போதைக்கு அடிமையாகி தன்னுடைய வாழ்க்கையையே சீரழித்து கொள்கிறார். இறுதியில் இதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார். இவர்களின் காதல் மீண்டும் எப்படி ஒன்று சேர்க்கிறது என்பது தான் படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
துருவ் விக்ரம் இந்த படத்தில் ஆக்ஷன், ரொமான்ஸ், எமோஷன் என அனைத்திலும் அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். புலிக்கு பொறந்தது பூனையாகுமா என்ன? என்பதை முதல் படத்திலேயே உணர்த்தி விட்டார்.
பெனிதா சந்துவின் நடிப்பு எதார்த்தமாக அமைந்துள்ளது. அன்பு படம் முழுவதும் துருவ்வுடன் பயணிக்கிறார். அவரின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
தொழில்நுட்பம் :
இசை :
ரதனின் பின்னணி இசை அற்புதம்.. பாடல்கள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு :
ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளது.
எடிட்டிங் :
விவேக் ஹர்ஷனின் எடிட்டிங் சூப்பர்.. இன்னும் சில இடங்களில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
இயக்கம் :
கிரிசாயா இயக்கம் சூப்பர். அர்ஜுன் ரெட்டி படத்தை அழகாக ரீமேக் செய்துள்ளார்.
தம்ப்ஸ் அப் :
1. படத்தின் கதைக்களம்
2. துருவ் விக்ரமின் நடிப்பு
3. கிளைமேக்ஸ் காட்சி
தம்ப்ஸ் டவுன் :
1. படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.