பிரபல தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அதிதி ராவ்.
Aditi Rao Complaint on Producer : தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் அதிதி ராவ் ஹைதாரி. இவர் தமிழில் காற்று வெளியிடை என்ற படத்தின் மூலமாக கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பின்னர் செக்கச் சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார்.
கடந்த வாரம் மலையாளத்தில் இவரது நடிப்பில் சோபியும் சுஜாவும் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் சினிமாவில் அறிமுகமானபோது வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதேபோல் வாரிசு தயாரிப்பாளர்களின் ஆதிக்கமும் தலைவிரித்தாடியது.
வாரிசு தயாரிப்பாளர் ஒருவர் எனக்கு இரண்டு சாய்ஸ் மட்டுமே கொடுத்தார். இன்று படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் சினிமா கனவை மறந்து விட்டு ஓடிவிடும் என்கிறார்.
ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு வேறு ஒரு படத்தில் அறிமுகமாகி நடித்தேன் கூறியுள்ளார்.
ஆனால் அனைத்து நடிகைகளைப் போல இவரும் அந்தத் தயாரிப்பாளர் யார் என்பதை கூறவில்லை. ஆனால் இவர் பேசிய இந்த பேச்சு அந்த தயாரிப்பாளர் யாராக இருக்கும் என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.
ஆளாளுக்கு ஒருவரின் பெயரை பதிவிட்டுக் இவர் தான் அவர் என கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் யார் அந்த தயாரிப்பாளர் என்பது அதிதி ராவுக்கு தான் வெளிச்சம்.
நடிகைகள் தற்போது தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சினிமாவில் இதுபோன்ற சம்பவங்கள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.