முழுக்க முழுக்க செல்போனில் படமான அடடே திரைப்படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க ஐ போன் 5s-ல் செல்போனில் படமாக்கப்பட்டுள்ளது அடடே என்ற திரைப்படம். இந்த புதிய முயற்சியின் மூலம் இப்படம் ரிலீசுக்கு முன்பே வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தை கமல் சரோமுனி என்பவர் இயக்கி தயாரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பாடல், எடிட்டிங், VFX என படத்திற்கு தேவையான அத்தனை வேலைகளையும் இவரே கவனித்துள்ளார்.
இதற்கான காரணம் என்ன என்பதை இயக்குனர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வாய்ப்பு தேடி தேடி அலைந்து விட்டேன்.
அதன் பின்னர் நாமே ஒரு வாய்ப்பை ஏன் உருவாக்க கூடாது என்ற நோக்கத்துடன் இந்த படத்தை முழுக்க முழுக்க செல் போனை மட்டுமே கொண்டு படமாக்கியுள்ளேன் என கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு ரசாந்த் அரவிந்த் இசையமைத்துள்ளார். கே.எஸ் குரூப் நிறுவனம் நாளை முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.