பிருந்தா வெப் சீரிஸ் குறித்து நடிகை திரிஷா வெளியிட்டிருக்கும் பதிவு வைரல்.

தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. எப்போதும் இளமை மாறாத அழகுடன் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது நடிப்பில் பிருந்தா வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. சூர்யா வங்கலா இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் இந்த பிருந்தா வெப் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இந்த வெப் சீரியஸின் முதல் பாகத்தின் பணிகள் முடிந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து திரிஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அப்பதிவில் அவர், இந்த தொடரில் நடித்த அனைவருக்கும் நன்றி எனக்கூறிய அவர் இத்தொடர் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.