நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து பலரது இதயத்தையும் கவர்ந்திருந்தார்.

அதன் பிறகு ராங்கி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருந்த திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விளம்பரத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்களைரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.