நடிகை ராதாவின் மகளும், கடல் படத்தின் நாயகியுமான துளசி நாயரின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
Actress Thulasi nair recent photos made shock – மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானமானவர் நடிகை துளசி நாயர். இவர் 80களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை ராதாவின் மகள் ஆவார். கடல் படத்திற்கு பின் ஜீவாவிற்கு ஜோடியாக ‘யான்’ திரைப்படத்தில் நடித்தார். ஆனால் 2 படமுமே வெற்றி அடையவில்லை.
ஒருபக்கம், நடிப்பின் காரணமாக படிப்பை தொடர முடியாததால் மும்பைக்கு படிக்க சென்றுவிட்டார். கல்லூரி படிப்பை முடித்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என அவர் திட்டமிட்டுள்ளாராம்.
தற்போது அவர் எடை போட்டுள்ளார். அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயுள்ள அவரின் சமீபத்தில் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே, சினிமா வாய்ப்பு கிடைக்குமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ‘கோ’ படத்தில் அறிமுகமான அவரின் சகோதரி கார்த்திகா நாயரும் சினிமாவில் வெற்றியை பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.