Actress Suicide

Actress Suicide : பிரபல சீரியல் நடிகை ஒருவர் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் உள்ள இளம் நடிகர் நடிகைகள் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்குவில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பவித்ர பந்தம் சீரியலில் நடித்து வந்தவர் ஜான்சி. இவர் சூர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தததாலும் சூர்யா இவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதால் மனமுடைந்து போயுள்ளார்.

இதனால் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியின் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் இவரது உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Telungu Serial Actress Jancy

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.