தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் காணாமல் போன ஸ்ரீ திவ்யா மீண்டும் விக்ரம் பிரபு நடிக்கும் ‘டைகர்’ படத்தில் ஜோடியாக இணைந்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

‘வருத்தப்படாத வாலிபர்’ சங்கம் என்ற படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து காக்கி சட்டை, ஈட்டி, பென்சில், சங்கிலி புங்கிலி கதவ தொற, பெங்களூர் நாட்கள் போன்ற ஒரு சில படங்களில் ஹோம்லி கேர்ள் ஆகவே நடித்து அசத்தியிருந்தார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விஷாலின் “மருது” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் ஸ்ரீதிவ்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது அதன் பின் சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதிவ்யா நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தின் இணைந்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது விக்ரம் பிரபு நடிப்பில் புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் “டைகர்” என்ற படத்தின் மூலம் ஸ்ரீதிவ்யா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்திற்கான கதையை இயக்குனர் முத்தையா எழுதியுள்ளார். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஸ்ரீதிவ்யா,விக்ரம் பிரபு உடன் இணைந்து “வெள்ளக்கார துரை” என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.