நடிகை சினேகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் ஆன புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகை ஆக திகழ்ந்திருந்தவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதிலும் புன்னகை அரிசியாக இடம் பிடித்த இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற ஒரு மகனும், ஆத்யந்தா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் சினேகா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் அவர் தனது மகள் மட்டுமின்றி மகன் மற்றும் கணவருடன் இணைந்து துபாயில் விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில் எடுத்த புகைப்படத்தை நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சோ க்யூட், லவ்வபல் பேமிலி போன்ற வார்த்தைகளை கமெண்ட் ஆக பதிவு செய்து வருகின்றனர்.