Actress Shobana About Thalapathy Movie : தமிழ் சினிமாவில் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவர் நடிப்பில், இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் ‘தளபதி’. இந்த படத்தின் கதாநாயகி ஷோபனா இதுவரை யாரும் அறிந்திராத ரகசியங்களை ஷோபனா ரிலீஸ் செய்துள்ளார். ஷோபனா தனது பேட்டியில் கூறியதாவது:
தளபதி படப்பிடிப்பு தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெற்றதால் இயக்குனர் மணிரத்தினம் ஷோபனாவை அந்த இரண்டு மாதமும் வீட்டிற்கு அனுப்பவில்லை என்பதால் அவர் படப்பிடிப்பு தளத்திலேயே அழுதுள்ளார்.
அப்போது ஷோபனாவிற்கு வெறும் 20வயது தான், எனவே பெற்றோர்களைப் பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த ஷோபனாவை நடிகர் மம்முட்டி ஆதரவாகப் பேசி சமாதானப்படுத்தி உள்ளாராம்.
சும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.!
மேலும் ரஜினியுடன் மீண்டும் இணைந்து ”சிவா” படத்தில் ஷோபனா நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் ஷோபனாவை பார்க்க மேற்கூரையை திறந்து கொண்டு உள்ளே படுத்திருந்த சோபனாவின் காலை பிடிப்பது உள்ளிட்ட காட்சி அமைந்திருந்ததால், என் ரசிகர்கள், “இந்த காட்சியை ஏற்க மாட்டார்கள்” என ரஜினிகாந்த் பிடிவாதமாக இருந்ததாகவும், பின் ஒருவழியாக ரஜினிகாந்த் சமாதானப்படுத்தி அந்த காட்சி படமாக்கப்பட்டது.
அவர் நினைத்தார் போன்றே, ரஜினியின் ரசிகர்கள் “ தலைவா நீ போயி அவளோட கால பிடிக்கலாமா?” என தியேட்டரில் அந்த காட்சி வரும்போது பலரும் என்னை ஓட்டு நாங்க.. என்று சுவாரஸ்யம் நிறைந்த பழைய நினைவுகளை வெளிப்படையாக, ஷோபனா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.