55 வயதில் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை சீதா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சீதா. 1970, 80-களில் நாயகியாக பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 55 வயதாகும் சீதா வித்தியாசமான லுக்கில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
மேலே புடவை கீழே பேண்ட் என இன்றைய கால நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றன.