விவாகரத்துக்கு பிறகுதான் எனக்கே இது தெரியும் என பெருமிதத்துடன் பேசியுள்ளார் நடிகை சமந்தா.
Actress Samantha Speech After Divorce : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் அவர்களது வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் சமந்தா.
தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? : விராட்கோலிக்கு முன்னாள் கேப்டன் கேள்வி
இப்படியான நிலையில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சமீபத்தில் தான் பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு சிறிது ஓய்வில் இருந்த சமந்தா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கிறார். ஹாலிவுட் சினிமாவில் கூட இவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா தான் இவ்வளவு மன வலிமையானவர் என்பதே எனக்கு இப்போது தான் தெரிகிறது. அதை நினைத்தால் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.
Ajith சாரை Thala-ன்னு சொல்லுறது சரியா..தவறா? – நடிகை Sanam Shetty-யின் பதில்
விவாகரத்து காரணமாக நான் உடைந்து போய் விடுவேன் அப்படியே இறந்து போய் விடுவேன் என நினைத்தேன். ஆனால் நான் வலிமையானவளாக அதில் இருந்து மீண்டு இந்த இடத்தில் வந்து நிற்கிறேன் என கூறியுள்ளார்.