
திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகை ரோஜா.
தமிழ் நடிகை மலையாளம் நினைத்தேன் இன்றி முடி படங்களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர் கே செல்வமணி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
தற்போது ரோஜா நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டு அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆந்திராவின் துணை முதல் அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

இப்படியான நிலையில் நடிகை ரோஜா திடீரென சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவருக்கு காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
