நடிகை நயன்தாரா தன்னை பற்றி வெளியான தவறான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்கள் மத்தியில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் காஸ்மெட்டிக் பிசினஸையும் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் சென்னையில் ஒரு பிரபல திரையரங்கை நண்பர்களுடன் இணைந்து விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. அதாவது, வடசென்னை பகுதியில் மிகவும் பழமையான திரையரங்கமான “அகஸ்தியா” என்னும் தியேட்டரை அவர் விலைக்கு வாங்கியதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இதற்கு நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதாவது, அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தி தொடர்பாளர் கூறுகையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் தாங்கள் இதுவரை எந்த தியேட்டரையும் வாங்கவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் எந்த செய்தியையும் உறுதி செய்த பிறகு வெளியிடும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.