நடிகை நயன்தாராவின் எமோஷனல் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திர தம்பதியர்களாக திகழும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கிய இவர்கள் அப்பிரச்சனைகளைத் தாண்டி தற்போது குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைசால் எமோஷனல் ஆன நயன்தாராவின் வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது, விக்னேஷ் சிவன் தங்களது முதல் திருமண நாளை அவர்களது வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் சிம்பிளாக கொண்டாடியுள்ளனர். அப்போது, ஒரு கணம் ஒருபோதும் பிரிய கூடாதே!! என்ற நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பாடலுக்கு இசை கலைஞர் ஒருவர் புல்லாங்குழலில் வாசித்தபடி சர்ப்ரைஸாக உள்ளே வர அதனை கண்டு ஆச்சரியத்துடன் ரசித்துக் கொண்டிருந்த நயன்தாரா ஒரு கட்டத்தில் எமோஷனலுடன் கண் கலங்கி விக்னேஷ் சிவனை அணைத்துக் கொண்டார். அந்த அழகான வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.