நடிகை கஸ்தூரி அஜித் கொடுத்த நிவாரண நிதி குறித்து பதிவிட்டுள்ளார்.
Actress Kasthuri Reaction in Ajith Contribution : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் மத்திய அரசு 21 நாட்களுக்கு இந்தியாவை முடக்கி வைத்துள்ளது.
மேலும் இந்த வைரஸ் தாக்கத்திலிரந்து இந்திய மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை மத்திய மாநில அரசுகளுக்கு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனையடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு நிதி அளித்து வந்தனர். கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் மாநில அரசிற்கு நிதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் தல அஜித் மத்திய அரசுக்கு ரூபாய் 50 லட்சமும் மாநில அரசுக்கு ரூபாய் 50 லட்சமும் அளித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பெப்சி ஊழியர்களுக்காக ரூபாய் 25 லட்சம கொடுத்து இருந்தார்.
தல அஜித்தின் அடுத்த படத்திற்காக போட்டிபோடும் இருபெரும் நிறுவனங்கள் – தல 61 பற்றிய மாஸ் அப்டேட்.!
இதனால் பலரும் தல அஜித்துக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறி வந்தனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ரூபாய் 1.25 கோடி கொடுத்த தல அஜித் நீடூடி வாழ்க, இதுவரை தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய தொகையை யாரும் கொடுக்கவில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
அஜித் ரசிகர்களால் ஏற்பட்டு வரும் சண்டைகளால் அஜித்தையும் அஜித் ரசிகர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த கஸ்தூரி தற்போது அவரை பாராட்டியது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
மேலும் தன்னுடைய பங்கிற்கு தன்னால் முடிந்த தொகையான ரூபாய் ஒரு லட்சத்தை நிதியாக கொடுத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தல அஜித் அவர்களின் நல்ல மனசுக்கு 1.25 கோடி நன்றி. நீடூழி வாழ்க.
Wonderful generous gesture from Thala Ajith. 1.25cr is I think the highest amount donated for COVID crisis by anyone from Tamil film Industry.
Special thx for allocating 25 lakhs to FEFSI. @SureshChandraa pic.twitter.com/iDffh3qgh4— Kasturi Shankar (@KasthuriShankar) April 7, 2020