Actress Kasthuri About Lockdown
Actress Kasthuri About Lockdown

கடைசியில் இதுதான் மிச்சம் என நடுத் தெருவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி.

Actress Kasthuri About Lockdown : தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்து வந்துள்ளார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லை என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்று நடித்து வருகிறார். சில படங்களில் அயிட்டம் பாடலுக்கு நடனமும் ஆடி வருகிறார்.

இடைவேளைக்குப் பிறகு மாஸ்டர் இப்படித்தான் இருக்கும்.. முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களைப் போலவே கல்லூரியும் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

மக்கள் பலரும் வேலைகளை இழந்து இருக்கும் நிலையில் கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பரிதாபமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தின் பின்புறத்தில் நடுத்தெரு என ஒரு தெருவின் பெயர் எழுதப்பட்ட பலகை ஒன்று இடம்பெற்றுள்ளது. கடைசியில் இதுதான் மிச்சம் என லாக் டவுனால் மக்களுக்கு ஏற்பட்ட அவலம் குறித்து அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் கஸ்தூரி தன் ரசிகர்களுக்கு குதிரைவாலி இட்லி எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஓவர் மேக்கப்புடன் கஸ்தூரி புடவையில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்