தல அஜித்துடன் நடித்தது பற்றியும் அவருடைய குணத்தை பற்றியும் தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபல நடிகை மானு.
Actress Interview About Ajith : தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்ற திரைப்படத்தில் திலோத்தம்மா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் மானு.
அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு நடன கலைஞர். முதல் முறையாக காதல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிக்க வந்தார்.
இந்த படத்தில் திலோத்தம்மா என்ற வேடத்தில் நடித்து அனைவரையும் காதலில் உருக வைத்தார். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தை தாறுமாறாக புகழ்ந்துள்ளார்.
என்னுடைய முதல் படத்திலேயே அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மிகவும் அமைதியான மனிதர். சிறந்த ஆன்மாவை கொண்டவர் என கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் என்னை சவுகரியமாக பார்த்துக் கொண்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அஜித்தின் பெற்றோர்களுடன் வெளியே செல்வேன்.
என்னுடைய இந்த முதல் படமே நல்ல ஓப்பனிங்கை கொடுத்தது. இன்று வரை ரசிகர்கள் இந்த படத்தை மறக்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதற்கு காரணம் அஜித் மட்டுமே எனக் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்ட மானு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிங்கப்பூர்க்கு சிகிச்சைக்காக சென்றிருந்த போது அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார்.
தற்போது மானு எந்த ஒரு படத்திலும் நடிப்பதில்லை. சிங்கப்பூரில் நடன பள்ளி ஒன்றை நடத்தி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.
இத்தனை வருடங்கள் கழித்தும் மானு அஜித்தை இப்படி புகழ்ந்து பேசி இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.