நடிகை அணு இமானுவேல் அண்மையில் அளித்த பேட்டியில் வருத்தத்துடன் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் அணு இமானுவேல். பிரபல தெலுங்கு நடிகை ஆன இவர் தமிழில் விஷாலின் துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தமிழ் ரசிகர்களின் மனதிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். மீண்டும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் அணு இமானுவேல் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வந்தது. தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அணு இமானுவேல் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

அதில் அவர்,”நான் எதிர்பாராத வகையில் திரையுலகிற்கு வந்தேன். சில வெற்றி திரைப்படங்களிலும் சில தோல்வி படங்களிலும் நடித்திருக்கிறேன். இப்போது நான் அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடித்ததால் அவரை காதலிக்கிறேன் என வதந்தி பரப்பியுள்ளனர். அதெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை. எனினும் என் அம்மா காதல் வதந்தியை பார்த்து அழுது விட்டார்.

இதனால் என் அம்மாவின் வேதனையை பார்த்து நான் வருத்தப்பட்டேன். ஊர்வசிவோ ராட்சசிவோ திரைப்படத்திற்கு முன் எனக்கு அல்லு சிரீசை தெரியாது. அவரை சந்தித்ததுகூட கிடையாது. படத்தின் பூஜையன்று மட்டும்தான் அவரை சந்தித்தேன். இந்த காலத்தில்கூட ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து காபி குடித்தால் விதவிதமான கற்பனை கதைகளை அவிழ்த்து விடுகின்றனர்.” என்று வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.