ஆண்ட்ரியா தொடர்பு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யார் என்பதை தேர்ந்து கொள்ள மேலும் சில தகவலை வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.
Actress Andrea Life Secrets : தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்ட நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. இவர் சமீபத்தில் பெங்களூரில் நடந்த கவிதை போட்டியில் கலந்து கொண்டு மிகவும் சோகமான கவிதை ஒன்றை கூறினார்.
இந்த கவிதைக்கு காரணம் தான் திருமணமான ஒருவருடன் தொடர்பு வைத்து கொண்டு மனதளவிலும் உடலளவிலும் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். ஆனால் அந்த நபர் யார் என்பது பற்றி கூறவில்லை.
ஒரே ஒரு ரூபாய் அதிகம் வசூலித்தால்? NKP பற்றி எச். வினோத் அதிரடி பேட்டி.!
இதனால் ரசிகர்கள் பலரும் அந்த நபர் யாராக இருக்கும் என கணக்கு போட தொடங்கினர், இறுதியில் அது யார் என ஆண்ட்ரியாவை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இதனால் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார். அந்த பதிவில் தான் எழுதியுள்ள புத்தகத்தில் அது யார் என்பதை தைரியமாக குறிப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த புத்தகத்தை எப்படி வாங்குவது? என கேட்க அதற்கும் அவர் பதிலளித்துள்ளார்.