ரோஜா படத்தை பார்த்து நானே என்னை செருப்பால் அடித்து கொண்டேன் என பிரபல நடிகை பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி மதுபாலா நடிப்பில் காதல் ரொமான்ஸ் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த வெளியான திரைப்படம் ரோஜா. இன்று வரை ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் இருந்து வருகிறது.

முதலில் இந்த படத்தில் மதுபான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா தானாம். மணிரத்தினம் அவரை சந்தித்து கதை சொல்ல முயற்சி செய்தபோது ஐஸ்வர்யாவின் பாட்டி தெலுங்கு படம் ஒன்றிற்காக முன்பணம் வாங்கி விட்டதால் மணிரத்னத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த தெலுங்கு படம் ட்ராப் ஆகி ஒரு மாதம் சும்மா தான் இருந்துள்ளார் ஐஸ்வர்யா. பிறகு இந்த படத்தில் மதுபாலா கமிட்டாகி நடித்து படம் வெளியான போது தன்னுடைய பாட்டியுடன் சேர்ந்து கோயம்பத்தூரில் படத்தை பார்த்துள்ளார்.

அப்போது இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இந்த நேரத்தில் என்னுடைய பாட்டி மட்டும் இருந்திருந்தால் நானே கழுத்தை நெரித்து கொன்றிருப்பேன் என்று பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.