விஜயுடன் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார் பிரபல நடிகர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவனது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தெறி. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க பிரபு, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர்.
வில்லனாக மகேந்திரன் மாஸ் காட்டி இருந்தார். ஆனால் முதலில் அவருக்கு பதிலாக வெள்ளி விழா நாயகன், மைக் மோகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மோகன் என்பவரை தான் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் அட்லீ.
90-ஸ்க்கு பிறகு ஃபீல்ட் அவுட்டாக இருந்த மோகனிடம் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடத்த அவர் நடித்தால் ஹீரோ தான், விஜய்க்கு வில்லனாக நடிக்க முடியாது என ஓபனாகவே சொல்லியுள்ளார்.
அதன் பிறகு தான் மகேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மோகன் சொன்ன படி ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.