நடிகர் உதயா நலிவடைந்த திரை கலைஞர்களுக்கு தன்னுடைய பிறந்த நாளான இன்று பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.
Actor Udhaya Helps to Cinema Artists : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயா. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றின் செயல்பாடுகளில் முக்கிய நபராக இருந்து வருபவர்.
நடிகர் சங்கத்தின் பாண்டவர் அணியின் கடந்த ஆட்சியில் செயற்குழு உறுப்பினராக இருந்த உதயா ஏசி சண்முகம் அவர்களின் மூலமாக அவரது மருத்துவமனையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த நலிவடைந்த கலைஞர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை பெற்று தந்தார். மேலும் திரையுலகை சேர்ந்த நலிவடைந்த கலைஞர்களின் பிள்ளைகளுக்காக ஒவ்வொரு வருடமும் 100 சீட்டுகளை பெற்றுத் தந்தார்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தின் அவசர கால நிதிக்காக ஏசி சண்முகம் அவர்களிடமிருந்து ரூபாய் 3 கோடியை வட்டியில்லாத கடனாக பெற்று தந்தார்.
கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு கலைஞர்கள் பெப்சி அமைப்பினருக்கு நிதி வழங்கியபோது நடிகர் சங்கத்திற்கும் உதவி செய்யுமாறு நடிகர் லாரன்ஸ் மாஸ்டரிடம் பேசி ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதி வாங்கி கொடுத்த பெருமையும் இவரையே சேரும்.
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடிய உதயா திரையுலகைச் சேர்ந்த நலிவடைந்த கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த மருத்துவ பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார்.
திரையுலக கலைஞர்களுக்காக அயராது உழைக்கும் உதயாவின் இந்த முயற்சிகளை பலரும் பாராட்டி வருகின்றனர். கலக்கல் சினிமாவும் அவரின் சேவை மென்மேலும் தொடர உதயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.