Actor Suriya Follows Thala Ajith And Super Star Rajinikanth way
சீனாவில் கடந்த வருடம் தோன்றிய கொரோனா வைரஸ் தடுப்பது உலக நாடுகளை அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.
நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளே மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக திரைப்பட ஷூட்டிங்களும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெரிய நடிகர்களின் படங்கள் தற்போதைக்கு தொடங்குவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகவே இருந்து வருகிறது.
தியேட்டர் திறந்ததும் முதலில் சூர்யா ரசிகர்களுக்கு தான் கொண்டாட்டம் – முக்கிய இயக்குனர் வெளியிட்ட தகவல், விஷயம் என்ன தெரியுமா? இதற்கான காரணம் பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் படமாக்கப்படும். தற்போது கொரானா பரவி வரும் சூழலில் அதற்கு சாத்தியமில்லை என கூறப்படுகிறது.
இதனால் ரஜினி, அஜித் ஆகியோர் கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக முடிவடைந்த பின்னர்தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என திட்டவட்டமாக கூறி உள்ளனர்.
இதனால் வலிமை, அண்ணாத்த ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் தான் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் இதே முடிவை எடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவு முழுமையாக முடிவடைந்து குரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக குறைந்த பின்னர் தான் அருவா படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்கும் என தெரிகிறது.
சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.