நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என பிரபல நடிகரான சௌந்தரராஜன் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
Actor Soundararaja About Suriya : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் அகரம் பவுண்டேசன் என்ற அமைப்பின் மூலமாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.
சமூக பிரச்சனைகளுக்காக எப்போதும் முதல் ஆளாக குரல் கொடுக்கிறார். சமீபத்தில் கூட நீட் தேர்வு குறித்து இவர் குரல் எழுப்பி இருந்தார்.
இதனால் இவருக்கு பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளன. அதேசமயம் சூர்யாவின் அறிக்கைக்கு ஆதரவும் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கிறது.
கவலை படாதே நண்பா.., Suresh Raina-வுக்கு ஆறுதல் கூறிய Suriya..!
இப்படியான நிலையில் தற்போது ஹீரோ, வில்லன், குணசித்ர வேடம் என அனைத்திலும் நடித்து வரும் பிரபல நடிகரான சௌந்தரராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சூர்யா அண்ணா அரசியலுக்கு வர வேண்டும். அதிலும் குறிப்பாக அவர் கல்வித்துறையில் என்ட்ரி கொடுத்தால் சூப்பரா இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது என்னுடைய ஆசை மட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆசையும் கூட என தெரிவித்துள்ளார்.
சூர்யாவைப் போலவே சௌந்தரராஜன் அவர்களின் அறக்கட்டளைகள் மூலமாக தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.