கொரானாவும் உங்களுக்கு ஒரு சவால் தான், சீக்கிரம் மீண்டு வாங்க பாலு என சிவக்குமார் பேசியுள்ளார்.
Actor Sivakumar About SPB : இந்திய சினிமாவில் பல ஆயிரம் பாடல்களைப் பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றில் எஸ்பி பாலசுப்ரமணியன் தன்னுடைய படங்களில் பாடிய பாடல்கள் குறித்து பேசியுள்ளார்.
மேலும் வாழ்க்கையில் நீங்க எவ்வளவு சவால்களை சந்தித்து விட்டீர்கள். இந்த கொரோனா வைரஸூம் உங்களுக்கு ஒரு சவால் தான். இதிலிருந்தும் மீண்டு வாங்க பாலு என தெரிவித்துள்ளார்.