மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து நடிகர் சத்தியராஜ் வெளியேறிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.
Actor sathyaraj wants to quit ponniyin selvan – செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்கு பின் எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார்.
பல வருட முயற்சிகளுக்கு பிறகு இப்படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சத்தியராஜ், பார்த்திபன், அனுஷ்கா, நயன்தாரா, அமலாபால், கீர்த்தி சுரேஷ், ஜெயராம் உள்ளிட்ட ரசிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளது. இப்படத்தை மணிரத்தனத்தோடு இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திலிருந்து சத்தியராஜ் வெளியேற முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தாலும், படப்பிடிப்பு நடக்கும் 6 மாதங்களுக்கு வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்கிற விதிமுறையே சத்தியராஜ் இந்த முடிவை எடுத்ததற்கு காரனம் எனக்கூறப்படுகிறது. எனவே, அவருக்கு பதிலாக வேறு யாரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறது. அதேநேரம் இப்படத்தில் நடிக்க சத்தியராஜை சம்மதிக்க வைக்கும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது.
தர்ஷனை அழைத்துப் பேசிய கமல்ஹாசன் – இந்தியன் 2 வில் வாய்ப்பு?
பாகுபலி படத்தில் கட்டப்பா வேடத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தவர் சத்தியராஜ் என்பதால் எப்படியாவது இப்படத்தில் அவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறது.