இனி பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் கொடுக்க இருப்பதாக சிவாஜிகணேசனின் மூத்த மகன் அறிவித்துள்ளார்.
Actor Ramkumar Announcement to Womens : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என்று பெயர் பெற்ற இவர் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருடைய இளைய மகன் பிரபு தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிவாஜி கணேசனின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் ஷங்கரின் ஐ படத்தில் நடித்து அனைவருக்கும் ஐக்கியமானார். இவர் தற்போது அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது தன்னுடைய அன்னை இல்லம் சார்பில் இனி வருடத்துக்கு 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டம் சிவாஜி கணேசன் நினைவு நாளில் இருந்து தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதற்கான வழிமுறைகள் நெறிமுறைகள் என்ன என்பதை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் மூத்த மகனுடைய இந்த அறிவிப்பு பெண்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.