நடிகர் ரஜினி காந்த் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு தனக்கான சம்பளத்தை குறைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தனது 169 வது திரைப்படத்தை நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 170 ஆவது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தலைவர் 170 என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியைக் கண்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ₹75 கோடி மட்டுமே சம்பளம் கேட்டிருக்கிறாராம். ஏற்கனவே இவர் நெல்சனின் ஜெய்லர் திரைப்படத்திற்கு ₹80 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அவர் தனது சம்பளத்தை குறைத்துள்ள தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனெனில் பல முன்னணி நடிகர்கள் தங்களுக்கான சம்பளங்களை ஏற்றி வரும் நிலையில் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கான சம்பளத்தை குறைத்து வருவது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளதால் இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.