நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை வைரல்.

கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் ரஜினி தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடினர். இதற்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை நீண்ட அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த அனைவரது பெயரையும் தனித்தனியாக குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.