ரஜினியின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கலை நடிகர் சூர்யா தீர்த்து வைத்துள்ளார்.
Actor rajini talked to Suriya for his next film – தர்பார் திரைப்படத்திற்கு பின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவாவின் படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்தார். சிவா கூறியதை கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துபோய் விட்டதாக கூறப்படுகிறது. அதோடு, பேட்டை படத்தை விட விஸ்வாசம் திரைப்படம் அதிக வசூலை பெற்றதால் அவர் இயக்கத்தில் நடிக்க ரஜினி விரும்புவதாக தெரிகிறது.
பிகில் படம் பார்த்துட்டேன்.. எப்படி இருக்கு தெரியுமா? – தயாரிப்பாளர் போட்ட டிவிட்
ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் படி நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை முடித்த பிறகே ரஜினி படத்தை இயக்கும் நிலைக்கு சிவா தள்ளப்பட்டார். எனவே, இந்த தர்மசங்கடமான நிலையை சிவா ரஜினியிடம் கூற, சூர்யாவை ரஜினியே தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
இன்னும் சில மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். என் படத்தை முடித்தவுடன் உங்கள் படத்தை சிவா இயக்குவார் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ரஜினியே நேரிடையாக கோரிக்கை வைத்ததால் சூர்யாவும் அதை ஏற்றுக்கொண்டார். எனவே, தர்பார் திரைப்படத்திற்கு பின் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளது.