நான் மின் கட்டணம் செலுத்தாத இது உண்மைதான் என நடிகர் பிரசன்னா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Actor Prasanna Reply to TNEB : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் பட பாடல் படைத்த சாதனை – அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!
இந்த நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்பு இந்த ஊரடங்கு காலத்தில் தன்னுடைய வீட்டிற்கு மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாகவும் உங்களுக்கு எவ்வாறு என கேள்வி எழுப்பிய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு பதில் அளிக்கும் விதமாக மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. மின் கட்டணத்தை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்த விவரங்களை அந்த அறிக்கையில் தெரியப்படுத்தி இருந்தது.
அதுமட்டுமல்லாமல் நடிகர் பிரசன்னா மார்ச் மாதத்திற்கான மின் கட்டண தொகையை செலுத்தவில்லை என்பதையும் அதில் சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து பிரசன்னா நிலுவையில் இருந்த மொத்த தொகையையும் செலுத்தி உள்ளார். பின்னர் அது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது ரீடிங் எடுத்து 10 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தும் பழக்கம் உடையவன் நான். கடந்த மார்ச் மாதத்தில் ரீடிங் எடுக்கப்படவில்லை ஆகையால் தான் மின் கட்டணம் செலுத்தவில்லை.
தற்போது நிலுவையில் இருந்த அனைத்து கட்டணத்தையும் செலுத்தி விட்டேன் எனக் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக பதிவிடவில்லை.
ஒருவேளை மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகளின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
#TNEB my true intention, response and request…. pic.twitter.com/v8r78BmD3G
— Prasanna (@Prasanna_actor) June 3, 2020