முரளியின் கடைசி ஆசை பற்றிய தகவல் ஒன்று 9 வருடங்களுக்கு பின்பு தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. ஹரோவாக மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர்.
இவருக்கு அதர்வா, ஆகாஷ் என இரண்டு மகன்களும் காவியா என்ற மகளும் உள்ளார். கடைசியாக இவர் அதர்வா நடித்திருந்த பானா காத்தாடி என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஜெயலலிதா ஆட்சியின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் 2006-ல் அதிமுகவில் இணைந்தார். பல ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுகவிற்காக உழைத்தார்.
எப்படியாவது 2011-ல் அம்மா ஆட்சி உருவாக வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்துள்ளது. அதற்காக முரளி உழைக்க தயாராக இருந்தும் 2010-ல் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் மரணமடைந்துள்ளார்.