நடிகர் கார்த்தி சர்தார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் திரைப்படத்தின் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் கார்த்தி. இவரது நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன்1 போன்ற திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் திரைப்படம் வெளியானது.

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ச்சியாக மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி தற்போது PS2, கைது 2, விக்ரம்2, சர்தார் 2 என பல படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி சொல்லியிருக்கும் கதைக்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சொன்ன கதை மிகவும் பிடித்து விட்டதால் கார்த்தி கையோடு அட்வான்சையும் கொடுக்க சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.