நிர்பயா கேஸ் ஓகே.. இதுக்கு எப்போ நீதி கிடைக்கும் என என ட்விட்டால் பரபரப்பை கிளப்பியுள்ளார் முன்னணி நடிகர் ஒருவர்.
Actor Karthi About NIrbhaya Verdict : டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ கல்லூரி மாணவி ஓடு பேருந்தில் 5 பேரால் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஒருவர் மட்டும் சிறுவர் என்பதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். நிர்பயா வழக்கில் இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு திரையுலக பிரபலங்கள் நன்றியை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி நிர்பயா வழக்கிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் பொள்ளாச்சி வழக்கிற்கு எப்போது தீர்வு கிடைக்கும்? இதற்கு எவ்வளவு நாள் எடுத்து கொள்ள போகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரசிகர்கள் பொள்ளாச்சி வழக்கிற்கு தீர்ப்பு எப்போது வரும் என கேள்வி கேட்ட தொடங்க கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Finally justice for Nirbhaya after 8 years. Wondering how long it will take for the Pollachi case to find justice. It’s been a year already. Hope we don’t forget the lessons we learnt from it!
Always stay safe. #NirbhayaCase— Actor Karthi (@Karthi_Offl) March 20, 2020