Actor Jiiva Funny Speech :
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா – ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் சதிஷ் பேசியதாவது,
“இந்தப்படத்தில் பெண் குரங்கு நடித்திருக்கிறது. ஆனால் அதுகூட என்னிடம் ஒட்டவில்லை. மனிதரோடு நடிப்பது சுலபம். குரங்கோடு நடித்தது மிகவும் சிரமம். இது எல்லோரையும் கடித்திருக்கிறது.
ஒவ்வொருத்தரும் படத்தை என்சாய் பண்ணி நடித்திருக்கோம். இயக்குநர் டான் சாண்டி அவர் சொன்னதைச் செய்தாலே போதும். அவருக்கு காமெடி அப்படி வரும்.” என்றார்
விழாவில் நடிகர் ஜீவா பேசியதாவது,
“கொரில்லா படம் ஒரு எக்ஸ்டானரி எக்ஸ்பீரியன்ஸ். ஏன் இந்தப்படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு அதனால் தான்.
வெட்கத்தை விட்டு இப்படி செய்தேன் – பேட்ட குறித்து பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
இந்தக் குரங்கு நல்ல ப்ரண்ட்லியா ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.
கொரில்லா மாதிரி ஒருபடம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது.
இந்தமாதிரி ஒரு படம் கொடுத்த தயாரிப்பாளருக்கு மறுபடியும் ஒரு நன்றி. டான் சாண்டி இந்தக்கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்சாய் பண்ணிக்கேட்டேன். படத்தையும் என்சாய் பண்ணி நடித்தேன்.
பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜும் இருக்கும். யுகபாரதி சாருக்கு நன்றி. அவர் எனக்கு நல்லநல்ல பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம்.” என்றார்.