Actor Durai Pandian Passes Away
Actor Durai Pandian Passes Away

மௌனம் பேசியதே, ரன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை துரைப்பாண்டியன் மரணமடைந்துள்ளார்.

Actor Durai Pandian Passes Away : தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிகராகவும் உண்மையில் கிருமினல் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருபவர் துரை பாண்டியன்.

அதிமுக கட்சியின் வழக்கறிஞர் பிரிவிலும் இவர் இடம் பெற்றுள்ளார். நுரையீரல் மற்றும் நீரிழிவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த துரை பாண்டியன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த துரைபாண்டியன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இவருடைய மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவருடைய மறைவிற்கு கொரோனா காரணமா என்ற கேள்வி எழும்ப நடிகர் துரை பாண்டியன் அவர்களுக்கு கொரானா தொற்று இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.