கேவி ஆனந்த்தை தொடர்ந்து அடுத்ததாக பழம்பெரும் நடிகர் செல்லத்துரை மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Actor Chelladurai Death : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கே வி ஆனந்த். இவர் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக பழம்பெரும் நடிகர் செல்லத்துரை மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது 84 வயதாகும் இவர் நேற்று மாலை மயங்கி விழுந்து மரணம் அடைந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.