47-வது மாநில பிஸ்டல் மற்றும் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்டார்.

ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் “AK 61” படத்தில் நடித்து வருகிறார்.

இதில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் நடிகர் அஜித்குமார் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். ஆனாலும் இன்று திருச்சியில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறும் 47-வது மாநில பிஸ்டல் மற்றும் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது நடிகர் அஜித் குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.