என்னை மட்டும் அப்படி சொன்னா வண்ட வண்டயா கேட்பேன் அபிஷேக் ராஜா ஆவேசமாக பேசியுள்ளார்.

Abishek Clarify on Controversy Speech of BB : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று பின்னர் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை சந்தித்து இரண்டாவதாக வெளியேற்றப்பட்டவர் அபிஷேக் ராஜா.

விராட்கோலிக்கு, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் பாராட்டு

#shamilisukumar diamonds shopping

இவர் சில வருடங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பட்டிமன்ற ஒன்றில் படு மோசமாக விமர்சனம் செய்திருந்தார். நூறு நாளில் கமல் சிஎம் ஆவதெல்லாம் நடக்காத விஷயம் என்பது போல பேசினார். இதுகுறித்து தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக் விளக்கம் அளித்துள்ளார்.

நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன். யூடியூபில் அவரைப் பற்றி அதிகமான வீடியோக்களை போட்டது நான் மட்டும்தான். அது எல்லாருக்குமே தெரியும். நான் அந்த பட்டிமன்றத்தில் பேசியதே கமல் சாரைப் பற்றி அல்ல. அப்போது Oviya for Cm என்ற டேக் டிரெண்ட் ஆகி கொண்டு இருந்தது. அதைப்பற்றி தான் பேசினேன். பிக்பாஸ் வீட்டில் நான் நானாகத்தான் இருந்தேன். என்னை யாராவது hypocrite என்று சொன்னால் வண்ட வண்டயாக கேட்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.