சூர்யாவுடன் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக பரவி வரும் தகவலுக்கு அபிராமி விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக நடிக்க வந்தவர் அபிராமி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக பிரபலமானார்.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அபிராமி, கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
இது குறித்து அவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கேட்ட போது யார் சொன்னது? என கேட்க பத்திரிகையாளர் செய்திகள் பரவி கொண்டு இருக்கிறது என கூறுகிறார்.
அதற்கு அபிராமி பரவுதா பரவட்டும் என கூறி விட்டு அது உண்மை இல்லை என பேசியுள்ளார். மேலும் விஜயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த படம் யாருடன்? சூர்யாவா? விஜயா? – அபிராமி விளக்கம் https://t.co/GwHc2Zm2Wt#Abhirami #Suriya #Vijay #SujaVarunee #AksharaReddy #Kollywood #Tamilcinema #Latestcinemanews #Thalapathy64 #Suriya40 #Ajith
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 25, 2019