சூரரைப் போற்று படவாய்ப்பு ஒண்ணும் சும்மா கிடைத்துவிடவில்லை என அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.
Abarna Balamurali About Soorarai Pottru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தின் இவரது நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் சூரரை போற்று.
டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எழுதிய நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருந்தது. படத்தை ஹாலிவுட் தரத்தில் இயக்கி இருந்தார் இயக்குனர் சுதா கொங்கரா.
இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கப்போகிறார் என அறிவிக்கப்பட்டது அனைத்து சூர்யா ரசிகர்கள் அப்செட் ஆனார்.
ஆனால் சுதா கொங்கரா மாறாவுக்கு ஏற்ற பொம்மியை தான் தேடி பிடித்துள்ளார் என்பது படம் பார்த்த பிறகு அனைவருக்கும் தெரிந்தது. அந்த அளவிற்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அபர்ணா பாலமுரளி.
எனக்கு வரப்போற பொண்டாட்டி இப்படித்தான் இருக்கணும் என பல இளைஞர்களின் மனதில் என் பிடித்துள்ளார் அபர்ணா.
இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சூரரைப்போற்று படத்தில் வாய்ப்பு இவருக்கு சும்மா கிடைத்துவிடவில்லை. பல ஆடிசன்களையும் பயிற்சிகளையும் மேற்கொண்டேன். பல டெஸ்டில் பாஸான பிறகுதான் சுதா கொங்கரா இவரைத் தேர்வு செய்ததாக தெரிய வந்துள்ளது.
சுதா கொங்கரா ஸ்பாட்டில் சிம்பிளாக இருப்பார். இந்த காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் இவர் இப்படித்தான் நடிக்கவேண்டும் என முன்கூட்டியே யோசித்து விட்டு தான் படப்பிடிப்பை தொடங்குகிறார். அவர் எதிர்பார்த்த நடிப்பு வெளிப்படும் வரை அவர் விடமாட்டார் என கூறியுள்ளார்.
மேலும் சூர்யா டவுன் டு எர்த் பர்ஷன். எல்லோரிடமும் அன்பாகப் பேசுவார். ஒரு காட்சியில் கூட இவ்வளவு தான் நடிக்க முடியும் என கூறி ஒதுங்க மாட்டார். இயக்குனர் சொல்வதை கேட்டு நடப்பார் என பேசியுள்ளார்.