சிம்புவுக்கு திருமண தோஷம் பிடித்து அதனை நிவர்த்தி செய்தால் தான் திருமணம் நடைபெறும் எனவும் நயன்தாரா திரிஷா அனுஷ்கா ஆகியோர் தெய்வப் பெண்கள் எனவும் கூறியுள்ளார் ஆத்ம சித்த லக்ஷ்மி அம்மா.
Aathma Chithar Lakshmi Amma Interview : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இராஜ குடும்பத்தில் பிறந்தவர் லட்சுமி அம்மா. சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் மீது அதிக நாட்டம் கொண்டு இருப்பதால் ஐந்து சித்தர்களிடம் தீட்சை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகளெல்லாம் பாசத்திற்காக ஏங்குபவர்கள். உள்ளே இருக்கும் வேதனைகளை மறைத்துக் கொண்டு போலியாக சிரித்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அவர்களின் தொழில் மீது கசப்பு ஏற்படும். அப்போது திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் திருமண வாழ்க்கையில் ஏமாற்றம் ஏற்படும் போது அது அவர்களை அதிகளவில் பாதிக்கிறது.
பிகில் 300 கோடி வசூல் பொய்யா? – திரையரங்கு உரிமையாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்! | Thalapathy Vijay
தமிழ் சினிமாவில் இருக்கும் த்ரிஷா நயன்தாரா அனுஷ்கா போன்ற நடிகைகள் தெய்வப் பெண்கள் என தெரிவித்துள்ளார். மேலும் சிம்புவை திருமணம் குறித்து கேட்டதற்கு அவருக்கு தோஷம் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ரகசியம் இருக்கும். அவரது குடும்பத்திற்கு ரகசியத்தை என்னிடம் கேட்டு அறிந்து பரிகாரம் செய்தால் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.