ராம் படத்தில் இடம்பெறும் ஆராரிராரோ பாடல் உருவான விதம் குறித்து கண்ணீருடன் பேசி உள்ளார் கவிஞர் சினேகன்.
Aaraariraro Ram Movie Song Making Secrets : தமிழ் சினிமாவில் அம்மாவை பற்றி வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே எப்போதும் மாபெரும் வரவேற்பை பெறும்.
அம்மாவைப் பற்றிய பாடல்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிகர்களை தொடர்ந்து ரசிக்கப்பட்ட தான் இருக்கின்றன.
அந்த வகையில் ஜீவா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ராம்.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் தான் ஆராரிராரோ தாயே நீ கண்ணுறங்கு என்ற பாடல். இந்த பாடலின் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியிருந்தார்.
மாஸ்டர் படத்தின் பாடல் படைத்த புதிய சாதனை – மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்..!
இந்த பாடலை விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சக்தி என்பவர் பாடியிருந்தார்.
அப்போது மேடையில் இருந்த அனைவரும் கண் கலங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன் அவர்கள் இந்தப் பாடல் எழுதிய பின்னணி குறித்து பேசியுள்ளார்.
அதாவது தன் அம்மா இறந்து விட்ட அன்று இரவு அமர்ந்து இந்தப் பாடலை எழுதியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 2500 பாடல்களை எழுதி இருந்தாலும் ஆராரிராரோ பாடல் கொடுத்த பெயரை எந்த பாடலும் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Click to See Video : https://www.facebook.com/watch/?v=646070119601659&extid=TxaPhSclu0s01UC8